தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் இன்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்களின் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகள் , வார்டுகளில் உள்ள குடிநீர் வசதி, சாலை பராமரிப்பு, கழிவு நீர் வடிகால், மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு பொதுப்பணிகள் தொடர்பான குறைகளை மனுவாக அளித்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, ஒவ்வொரு மனுவும் உரிய துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மக்கள் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் வகையில் துறை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துறை அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.