தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட இளையரசனேந்தல் சாலையில் புதிதாக கட்டப்பட்டு, நூலக வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள கோவில்பட்டி திமுக நகரக் கழக அலுவலகக் கட்டிடத்தை நேற்று (28.10.2025) முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதே நேரத்தில், அலுவலக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலையையும் அவர் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்த சிறப்புவிழாவில் அமைச்சர்கள் கே.என். நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர். பெரியகருப்பன், பி. கீதா ஜீவன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜா, மார்கண்டேயன், ரகுராம், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் கிரகாம்பெல், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், தலைமை செயற்குழு உறுப்பினர் என். இராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் இரா. ரமேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் (கோவில்பட்டி மேற்கு) எஸ். பாலமுருகன், கோவில்பட்டி மத்திய ஒன்றிய கழக செயலாளர் பீக்கிலிபட்டி வீ. முருகேசன், கோவில்பட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜி. ஜெயக்கண்ணன், கோவில்பட்டி மத்திய ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ. சந்திரக்கண்ணன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.