கோவில்பட்டியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28.10.2025) வருகை தந்தார்.

இந்நிகழ்வை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் தோட்டிலோவன்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் முதலமைச்சரை அன்புடன் வரவேற்றார்.

முதல்வர் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் உற்சாகமான சூழல் நிலவியது. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், பொதுமக்கள், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் என பலரும் பெருமளவில் திரண்டு முதல்வரின் வருகையை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

முதல்வரின் வருகை மாவட்ட மக்களுக்கு பெருமை அளிப்பதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.