தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரையன்ட்நகர் பகுதியில் அமைந்துள்ள கோவிலில் நேற்று இரவு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவம் இன்று சில மணி நேரங்களிலேயே போலீசாரால் தீர்க்கப்பட்டது.
கோவில் நிர்வாகியான இசக்கிபாண்டி (46) நேற்று இரவு வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை திறந்து பார்க்கும்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த 10,000 ரூபாய் பணம் திருடப்பட்டிருப்பது கவனத்திற்குவந்தது. இதுகுறித்து அவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் (19) என்பவரே உண்டியலை உடைத்து பணத்தை திருடியமை கண்டறியப்பட்டது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து, திருடப்பட்ட ரூபாய் 10,000 பணத்தையும் மீட்டனர்.
கோவில் உண்டியல் உடைப்பு வழக்கை குறுகிய நேரத்தில் நளினமாகத் தீர்த்த போலீசாரின் அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது.
தூத்துக்குடி
கோவில் உண்டியல் உடைப்பு : இரவில் நடந்த திருட்டு, பகலே போலீஸின் கையில் சிக்கிய இளைஞர்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“தூத்துக்குடி காவல்துறைக்கு புதிய பலம் – 13 ஊர்க்காவல் வீரர்கள் பணி நியமன ஆணை பெற்றனர்!”
அடுத்த
முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கலந்து கொண்ட நாடார் சமுதாய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026