ஆத்தூர் தாமிரபரணி புதிய ஆற்றுப் பாலத்தை சரிசெய்ய வேண்டும் என்று சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சமக மாவட்டச் செயலாளர் அற்புதராஜ் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், "கடந்த 2023 டிசம்பர் மாதம் ஏற்பட்ட கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் புதிதாக கட்டப்பட்ட ஆத்தூரில் தாமிரபரணி ஆற்றுப் பாலம் நடு பகுதி கான்கிரீட் தூண் வழுவிழந்து பூமியில் இறங்கியதால் மிகவும் அபாய நிலையினை அடைந்து உடனடியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலத்தில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.
இன்று வரை பழுதான ஆற்றுப்பாலத்தை சரிசெய்யவில்லை. அந்த வழியாகத்தான் ஆன்மீக தளமான திருச்செந்தூர், மணப்பாடு, உவரி செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா செல்லும் வாகனங்கள் தினசரி ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன. இதனால் மிக பெரிய போக்குவரத்து நெருக்கடியும், பழைய பாலத்தில் முறையான தடுப்பு சுவர்கள் இல்லாததால் மிக பெரிய ஆபத்துகளும், வாகன விபத்துகளும் எற்படுகிறது.
ஆகவே இதற்கு மேலும் தாமதிக்காமல் போர்க்கால அடிப்படையில் பழுதாகி காட்சிப்பொருளாக நிற்க்கும் ஆத்தூர் தாமிரபரணி புதிய ஆற்றுப்பாலத்தை சரி செய்து மக்கள் பயன்பாட்டுக்கும் சீரான போக்குவரத்திற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி
தாமிரபரணி புதிய ஆற்றுப் பாலத்தை சரிசெய்ய வேண்டும் - சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை மனு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாபெரும் மரம் நடும் விழா - உயர் நீதிமன்ற நீதிபதியும், மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயல் தலைவருமான எஸ்.எஸ். சுந்தர் தலைமையில் நடைபெற்றது!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி லேபர் காலனியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மற்றும் மாவட்டத்தில் போதை பொருட்களை கட்டுப்படித்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரி தவெக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் மனு!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026