தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (19.04.2025) காமராஜ் கல்லூரில் வைத்து மாண்புமிகு உயர் நீதிமன்ற நீதிபதியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல் தலைவருமான எஸ்.எஸ். சுந்தர் தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலருமான சுதா மற்றும் மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி/தலைவர் வசந்தி M.L., ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
மேற்படி நிகழ்வில் மாவட்ட நீதிபதிகள், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஏனைய நீதிபதிகள், துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், மாவட்ட துணை வன அலுவலர், கல்லூரி முதல்வர், கிராம உதய தொண்டு நிறுவன மேலாளர் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
முன்னதாக மாண்புமிகு உயர் நீதிமன்ற நீதிபதி பத்திரிக்கை செய்தியை வெளியிட்டார். மேற்படி சிறப்புரையில் சுற்றுசூழல் பாதுகாப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை என்றும், மரம் நடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டு என்று விளக்கமாக எடுத்துரைத்தார். மேற்படி மாபெரும் மரம் நடும் விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் / முதுநிலை உரிமையியல் நீதிபதி. கலையரசி ரீனா M. L., மற்றும் இளநிலை நிர்வாக உதவியாளர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
தூத்துக்குடி
மாபெரும் மரம் நடும் விழா - உயர் நீதிமன்ற நீதிபதியும், மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயல் தலைவருமான எஸ்.எஸ். சுந்தர் தலைமையில் நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மசோதா தாக்கல் - முதல்வர் ஸ்டாலினுக்கு தூத்துக்குடி மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் அணி சார்பில் நன்றி!!
அடுத்த
தாமிரபரணி புதிய ஆற்றுப் பாலத்தை சரிசெய்ய வேண்டும் - சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை மனு!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026