உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முழுவதும் பல்வேறு விழாக்கள் உற்சாகமாக நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக, திரேஸ்புரம் அண்ணா சங்குகுழி தொழிலாளர் சங்கம் சார்பில் தூத்துக்குடி தினேஷ் படத்துக்கு அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அண்ணா சங்குகுழி தொழிலாளர் சங்கத் தலைவர் இசக்கிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் மெடல்களை வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து, நலிவுற்ற 250 மீனவக் குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட முக்கிய நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் துணைத் தலைவர் மாரி லிங்கம், செயலாளர் முருகையா, துணை செயலாளர் முனியசாமி, பொருளாளர் விமலசன், துணைப் பொருளாளர் மாரியப்பன், ஆலோசகர் சந்தனராஜ், கவுரவ ஆலோசகர் பேராசிரியை பாத்திமா பாபு, ஆலோசகர் சண்முகசுந்தரம், கில் நெட் படகு சங்கத் தலைவர் கணேசன், 8வது வார்டு பொறுப்பாளர் சன்னாசி, துணை செயலாளர் அகமது, முத்தரையர் நகர் தலைவர் கருப்பணன், கண்ணப்பகுல முத்தரையர் கணவாய் சங்கம் வெள்ளைச்சாமி, ஊர் செயலாளர் ராஜேந்திரன், சிலம்ப வாத்தியார் ஸ்டாலின், இருதய அரசர் சங்குகுழிச் சங்கத் தலைவர் ரெனிஸ்டன், திரேஸ்புரம் அருட்பங்கு தந்தை அமல்ராஜ், மகளிர் மீனவர் சங்கத் தலைவி மல்லிகா, பார் வலைச் சங்க செயலாளர் இசக்கிமுத்து, வணிகர் சங்க பாஸ்கர், திரேஸ்புரம் பள்ளிவாசல் தலைவர் ஷாஜகான், செயலாளர் முகமது தாஹிர், கட்டுமான தொழிலாளர் சங்கம் மின்னல் அம்சத், ராமர், 8வது வார்டு மாமன்ற உறுப்பினர் பவானி மார்சல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை செம்மைப்படுத்தினர்.