தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களில் தங்கி கல்வி பயிலும் மாணவர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் – 2025 இன்று (22.11.2025) காமராஜ் கல்லூரி மைதானத்தில் உற்சாகமாக தொடங்கின.

போட்டிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரான பி. கீதா ஜீவன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் க. இளம்பகவத், இ.ஆ.ப அவர்கள் தலைமையேற்று சிறப்பான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தினார்.

மாணவர்களின் உடல் நலம், திறமைகள் மற்றும் கலை ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு தடகள மற்றும் கலைப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. மாவட்டம் முழுவதும் இருந்து மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டு போட்டித் தளத்தை கொண்டாட்டமாக மாற்றினர்.