தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட புறவழிச்சாலையில் அமைந்துள்ள மீன் வளக் கல்லூரி முன்புற ஓடையில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகள் முழு தீவிரத்துடன் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூர் வாரும் பணியின் முன்னேற்றம், நீர் ஓட்டம் தடையில்லாமல் செல்லும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவற்றை அவர் மதிப்பாய்வு செய்தார்.

இவ்வாய்வின்போது மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், வட்ட கழக செயலாளர் பிரசாந்த் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

மக்களின் நலனை முன்னிட்டு மழைக்காலத்திற்கு முன் நகரின் வடிகால் அமைப்புகள் அனைத்தும் சீரமைக்கப்படும் என மேயர் தெரிவித்தார்.