தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வீரநாயக்கன்தட்டு பகுதியிலுள்ள உப்பாற்று ஓடையில் தூர் வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்து, வேகமாகவும் தரமாகவும் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

இவ்வாய்வில் மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், பகுதி கழக செயலாளரும் மாநகர மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், வட்ட கழக செயலாளர் பிரசாந்த் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பொது மக்களின் நீர்ப்பாய்ச்சி தடைகள் நீங்கி மழைக்காலத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்படாதவாறு தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று மேயர் தெரிவித்தார்.