ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஆரோக்கியபுரம் புனித ஜோசப் தொழுநோய் மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா நடைபெற்றது. இதில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை காரணமாக தொழுநோய் மருத்துவமனை வளாகத்தில் அதிக அளவு மழைநீர் தேங்கி, நோயாளிகள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. நோயாளிகள் கடும் சிரமம் அடைந்த நிலையில், எம்.சி.சண்முகையா இரவு–பகல் பாராமல் மருத்துவமனையிலேயே இருந்து மின்மோட்டார்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்களை வரவழைத்து மழைநீரை வெளியேற்றுவதில் முக்கிய பங்காற்றினார்.
இந்த மனிதநேய சேவையை பாராட்டி தொழுநோய் மருத்துவமனை தலைமை பொறுப்பாளர் அருட்சகோதரி ராஜீ, எம்எல்ஏக்கு நினைவு பரிசு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் TTC. ராஜேந்திரன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் தனுஷ்பாலன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பிலோமின் ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், ஒன்றிய சுற்றுச்சூழணி அமைப்பாளர் ராஜேந்திரன், கிளை செயலாளர் ஜேசுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி.சண்முகையா பங்கேற்ற புனித ஜோசப் தொழுநோய் மருத்துவமனை கிறிஸ்துமஸ்–புத்தாண்டு விழா!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகள்!!
அடுத்த
பிரேக்கிங் நியூஸ்: நாளை தூத்துக்குடியில் 7 மணி நேர மின் நிறுத்தம் – காலை 9 முதல் மாலை 4 வரை ‘பவர் ஆஃப்'
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026