ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஆரோக்கியபுரம் புனித ஜோசப் தொழுநோய் மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா நடைபெற்றது. இதில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை காரணமாக தொழுநோய் மருத்துவமனை வளாகத்தில் அதிக அளவு மழைநீர் தேங்கி, நோயாளிகள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. நோயாளிகள் கடும் சிரமம் அடைந்த நிலையில், எம்.சி.சண்முகையா இரவு–பகல் பாராமல் மருத்துவமனையிலேயே இருந்து மின்மோட்டார்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்களை வரவழைத்து மழைநீரை வெளியேற்றுவதில் முக்கிய பங்காற்றினார்.

இந்த மனிதநேய சேவையை பாராட்டி தொழுநோய் மருத்துவமனை தலைமை பொறுப்பாளர் அருட்சகோதரி ராஜீ, எம்எல்ஏக்கு நினைவு பரிசு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் TTC. ராஜேந்திரன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் தனுஷ்பாலன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பிலோமின் ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், ஒன்றிய சுற்றுச்சூழணி அமைப்பாளர் ராஜேந்திரன், கிளை செயலாளர் ஜேசுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.