தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (டிசம்பர் 16) செவ்வாய்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படும் என மின்வாரியம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த மின் நிறுத்தம் காரணமாக மடத்தூர், முருகேசநகர், சிப்காட் வளாகம், அசோக் நகர், ஆசிரியர் காலனி, 3வது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, மில்லர்புரம், ஹவுசிங் போர்டு, அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகர், பத்திநாதபுரம், சங்கர் காலனி, FCI குடோன், நிகிலேசன் நகர், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசிர்வாத நகர், சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர் நகர், ராஜரத்தின நகர், பாலையாபுரம், வி.எம்.எஸ் நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், லூசியா காலனி, மகிழ்ச்சி புரம், ஜோதி நகர், பால்பாண்டி நகர், முத்து நகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், NGO காலனி, அன்னை தெரசா நகர், பாமா காலனி, TMB காலனி, அண்ணாநகர் 2வது மற்றும் 3வது நகர், கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகர், புதூர் பாண்டியாபுரம் மெயின் ரோடு, கிருபை நகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம் நகர், கணேஷ் நகர், புஷ்பா நகர், ஸ்டெர்லைட் குடியிருப்புகள், கலெக்டர் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்படும்.

பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின் நிறுத்த நேரத்தை கருத்தில் கொண்டு முன்கூட்டியே தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.