இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்கள், சார் தாம், அகில இந்திய ஸ்கேட்டிங் சுற்றுலா மற்றும் கலாச்சார ஸ்லோகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் அஜய் குமார் விஸ்வகர்மா, தேசியக் கொடியுடன் நீண்ட தூர ஸ்கேட்டிங் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அவரது பயணம் ஜார்கண்ட் முதல் கன்னியாகுமரி, பின்னர் கன்னியாகுமரி முதல் காசி வரை நடைபெறுகிறது. மதமும், கலாசாரமும், தேசப் பற்றும் ஒன்றிணையும் இந்த தனித்துவமான ஸ்கேட்டிங் சுற்றுலா வழியாக, இளைஞர் தலைமுறைக்கு ஊக்கம் அளிக்கும் நோக்கத்துடன் அஜய் குமார் தனது முயற்சியைத் தொடங்கியுள்ளார்.
அவரது இந்த அரிய முயற்சிக்கு தூத்துக்குடியில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட காமராஜர் நற்பணி மன்றத் தலைவர் லாரன்ஸ் அவர்கள், அஜய் குமாரை வாழ்த்தி வரவேற்றார். அவருடன் நவமணி உட்பட பலரும் கலந்து கொண்டு, தேசிய உணர்வை வெளிப்படுத்தும் விதமாக ஸ்கேட்டருடன் செல்பி எடுத்து உற்சாகம் பகிர்ந்தனர்.
தேச ஒருமைப்பாடு, ஆன்மீக ஒற்றுமை மற்றும் இளைஞர் விழிப்புணர்வை இணைக்கும் அஜய் குமாரின் இந்த ஸ்கேட்டிங் யாத்திரை, மக்கள் மத்தியில் பாராட்டையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி
தேசியக் கொடியுடன் ஜார்கண்ட் முதல் காசிவரை ஸ்கேட்டிங் பயணம் – தூத்துக்குடியில் அஜய் குமாருக்கு உற்சாக வரவேற்பு!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதுக்கோட்டை மக்கள் கோரிக்கை தீவிரம் – தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் நீட்டிப்பு அவசியம்!
அடுத்த
மக்களின் மனுக்களுக்கு நேரடி பதில் – தூத்துக்குடியில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டங்கள்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026