பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 118வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி 3ம் மைல் பகுதியில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிமுக முன்னாள் முதல்ர் ஓ.பி.எஸ். எம்எல்ஏ அவர்களின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் மாடசாமி, பகுதி செயலாளர்கள் செல்லத்துரை, முத்து, மாவட்ட அணி செயலாளர்கள் ஜெயபால், சாமுவேல் சுதாகர், தங்க மாரியப்பன், செயற்குழு உறுப்பினர் சந்திரா, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெயராமன், மாவட்ட அணி தலைவர்கள் மகேஸ்வரன், மாரியப்பன், செல்லத்துரை, மாவட்ட இணைச் செயலாளர்கள் அந்தோணி ஜெபராஜ், அந்தோணி ஜெயக்குமார், சிவசூரியன், ராஜதுரை, மாவட்ட அணி பொருளாளர்கள் வின்சென்ட், வேல்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் பகுதி மகளிர் அணி தலைவி மாடத்தி, எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கண்ணன், பகுதி ஜெ.பேரவை தலைவர் பொய்யாமொழி, எம்ஜிஆர் மன்ற செயலாளர் நல்லதம்பி, எம்ஜிஆர் மன்ற தலைவர் எம்ஜிஆர் கணேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல்லா ஹாசன், கலை இலக்கியப் பிரிவு தலைவர் மகாராஜன், மாணவர் அணி தலைவர் சுந்தர், வட்ட செயலாளர்கள் ஆறுமுகம், சுசீந்திரன், செல்வகுமார், சபிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தேவரின் தியாகத்தையும் தேசிய உணர்வையும் போற்றி மரியாதை செலுத்தினர்.