தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில், 3வது மைல் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, புகழ் வணக்கம் செலுத்தி மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் மண்டல தலைவர் ஐசன் சில்வா, மாநகர் மாவட்ட சேவா தளம் தலைவர் ராஜா, எஸ்.சி பிரிவு மாவட்ட தலைவர் பிரபாகரன், ஊடகப்பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், மீனவர் அணி மாவட்ட தலைவர் மிக்கேல், மாவட்ட துணை தலைவர் ஜெபராஜ், சின்னகாளை, மாவட்ட பொதுச் செயலாளர் மைக்கேல் பிரபாகர், மாவட்ட செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, மாநில அமைப்புசாரா செயற்குழு உறுப்பினர் சாந்திமேரி, இளைஞர் காங்கிரஸ் மண்டல தலைவி கமலா தேவி, மாவட்ட செயலாளர் ரெனிஷ் பாபு, மீனவரணி நகரத் தலைவர் சிமியான், வார்டு தலைவர்கள் சுப்பிரமணி, ராஜரத்தினம், கிருஷ்ணன், முனியசாமி, அந்தோணிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.