தூத்துக்குடி தெற்கு பண்டாரம்பட்டியைச் சேர்ந்த மனோகரன் (33) தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கடந்த 14 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்த நிலையில் பணியின்போது உயிரிழந்தார்.

இச்சம்பவம் நடந்து மூன்று நாட்களாகியும் முழுமையான விசாரணை நடத்தப்படாதவை கண்டித்தும், மனோகரின் மரணத்திற்கு நியாயம் கோரியும், அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு நிவாரணம் மற்றும் மனைவிக்கு அரசு வேலை வழங்க கோரியும், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது.

வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் மற்றும் சமூக ஆர்வலர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.