தூத்துக்குடி. பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலமாக கொண்டாட பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வருகிற (15.07.2025) அன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பள்ளிச்சீருடைகள், ஸ்கூல் பேக் ஆகியவை தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன்மடம் ஊராட்சி, காமராஜர் நகர் பகுதியில் அமைந்துள்ள பால்கனி நாடார் தோட்டத்தில் வைத்து வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து அறுசுவை அசைவ விருந்து மெகா அன்னதானம் வழங்கப்படுகிறது.
மேலும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், கேக் வெட்டியும் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், சமுதாய சொந்தங்கள், ஊர் பெரியவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் ஏ. லெட்சுமணன், மாநில பொருளாளர் எம்.எஸ்.டி. ரவிசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பல்வேறு தலைவர்களை நேரில் சந்தித்து காமராஜர் பிறந்த நாள் விழா அழைப்பிதழை வழங்கி வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்ட மதிமுக பொருளாளரும் மாநில பொதுக்குழு உறுப்பினரும் பிரபல தொழிலதிபருமான காசி மெட்டல்ஸ் உரிமையாளர் பிச்சைமணி நாடார், ஜெயபால் நாடார் ஆகியோரை நேரில் சந்தித்து பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழாவிற்கு வருகை தருமாறு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தார்.
கல்வி கண் திறந்த கர்ம வீரர் காமராஜரின் 123 வது அவதார தின விழாவை தூத்துக்குடியில் பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் வெகு சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) சார்பில் அதன் நிறுவனத்தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம், பள்ளி மாணவர்களுக்கு நோட்டுபுத்தகம் வழங்குதல் உள்ளிட்ட எண்ணற்ற நலத்திட்டங்களை சிறப்பாக செய்ய முன்னேற்பாடு பணிகளை நிறுவனத் தலைவர் சிறப்பாக செய்து வருகிறார்.
தூத்துக்குடி
காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு குமரி மாவட்ட மதிமுக பொருளாளரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) தலைவர் எஸ்.பி. மாரியப்பன்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி தெற்கு ஸ்பிக் நகர் பகுதி, ராஜிவ் நகரில் ஒட்டப்பிடாரம் சண்முகையா எம்.எல்.ஏ., தலைமையில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்!!
அடுத்த
தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம் சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026