தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பாக தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இன்று (02.07.2025)  பிறந்தநாள் காணும் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினரும், தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான N.P. ஜெகன் பெரியசாமிக்கு தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பாக சால்வை அணிவித்து, மேயரின் புகைப்படங்கள் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் மாநிலதலைவர் Lion.M. மருதப்பெருமாள் M.Com, பொதுச்செயலாளர் ஜெயராஜ், வக்கீல் ஞானராஜ்  தூத்துக்குடி மாவட்ட காதுகேளாதோர், மற்றும் வாய்பேச முடியாத முன்னேற்ற நல்வாழ்வுசங்கத்தின்  தலைவர் பேச்சிமுத்து, செயலாளர் கமல், தனசேகர் மற்றும் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.