ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் எஸ். கைலாசபுரம் ஊராட்சி, சவரிமங்கலம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 9.47 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், வட்ட வழங்க அலுவலர் ராஜேஸ்வரி, ஓட்டப்பிடாரம் கூட்டுறவு வங்கி செயலாளர் மாரிமுத்து, குலசேகரநல்லூர் கூட்டுறவு வங்கி செயலர் முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி செல்வராஜ், கொம்பாடி தளவாய்புரம் பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர் கதிர்வேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.