தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வல்லநாட்டில் உள்ள அன்னாரது மணிமண்டபத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் கருங்குளம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி, ஒன்றிய அவைத்தலைவர் வெங்கடசுப்பு, ஒன்றிய துணைச் செயலாளர்கள் வீரபாகு, சுரேஷ்குமார், ஒன்றிய பொருளாளர் மந்திரமூர்த்தி, ஒன்றிய இளைஞரணி சஞ்சய், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மாரியம்மாள், ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சொக்கலிங்கம், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி மதுபாலமணி, கிளைக் கழகச் செயலாளர்கள் முருகன், இசக்கி, தசரதராமன், மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.