பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் T.ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநகரச் செயலாளர் இக்னேஷியஸ், ஆராய்ச்சி துறை சிவராஜ் மோகன், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், ரூஸ்வெல்ட், Sc/St முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், விவசாய பிரிவு பேரையா, F.சேகர், சுரேஷ்குமார், முத்து (INTUC), சிவமூர்த்தி, மனோகரன், சாமுவேல், சிவலிங்கம், AICWC மகிளா காங்கிரஸ் சார்பில் இசக்கியம்மாள், தனலட்சுமி, ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட செயலாளர் சம்சுதீன், வழக்கறிஞர் செல்வம், பாலகிருஷ்ணன், பிரைன்நாத், காமராஜ், மாணவர் காங்கிரஸ் தினேஷ், FCI INTUC சார்ந்த முத்து, ரமேஷ், சாரதி, கிரிதர், பாலன் ஆகியோர் மற்றும் ஏராளமான தேசிய நெஞ்சங்கள் கலந்து கொண்டனர்.

பசும்பொன் தேவரின் தியாகம், தேசபற்று, ஆன்மீகத்தன்மை ஆகியவற்றை போற்றி, காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு புகழ் வணக்கம் செலுத்தினர்.