தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழா இன்று தமிழகம் முழுவதும் பக்தி உணர்வோடு அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி தூத்துக்குடியில் மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் அவர்கள் தேவரின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேவர் அவர்களின் தேசப்பற்று, தெய்வீக நம்பிக்கை மற்றும் சமூக ஒற்றுமை குறித்த தத்துவங்கள் இன்றும் மக்களிடையே வழிகாட்டியாக திகழ்கின்றன என்று அவர் தெரிவித்தார்.