ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) சார்பில் போட்டியிடுவதற்காக தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளரும், கருங்குளம் முன்னாள் சேர்மனுமான டாக்டர் எஸ். எம். ஏ. கோசல்ராம் ராஜா இன்று அதிமுக தலைமைக்கழகத்தில் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், கடம்பூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில், அதிமுக அமைப்பு செயலாளர் கோகுல் இந்திராவிடம் விருப்ப மனு வழங்கப்பட்டது.

கட்சியின் கொள்கைகள் மற்றும் பொதுச் செயலாளர் வழிகாட்டுதலின்படி, ஓட்டப்பிடாரம் தொகுதி மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றும் நோக்கில் இந்த விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டதாக டாக்டர் கோசல்ராம் ராஜா தெரிவித்தார்.

இந்த நிகழ்வு அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியதுடன், ஓட்டப்பிடாரம் தொகுதியில் அரசியல் சூழலில் புதிய எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.