ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) சார்பில் போட்டியிடுவதற்காக தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளரும், கருங்குளம் முன்னாள் சேர்மனுமான டாக்டர் எஸ். எம். ஏ. கோசல்ராம் ராஜா இன்று அதிமுக தலைமைக்கழகத்தில் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், கடம்பூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில், அதிமுக அமைப்பு செயலாளர் கோகுல் இந்திராவிடம் விருப்ப மனு வழங்கப்பட்டது.
கட்சியின் கொள்கைகள் மற்றும் பொதுச் செயலாளர் வழிகாட்டுதலின்படி, ஓட்டப்பிடாரம் தொகுதி மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றும் நோக்கில் இந்த விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டதாக டாக்டர் கோசல்ராம் ராஜா தெரிவித்தார்.
இந்த நிகழ்வு அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியதுடன், ஓட்டப்பிடாரம் தொகுதியில் அரசியல் சூழலில் புதிய எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி – அதிமுக சார்பில் போட்டியிட டாக்டர் கோசல்ராம் ராஜா விருப்ப மனு தாக்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"சாக்தஸ்ரீ" சற்குரு ஶ்ரீனிவாச சித்தர் தலைமையில் தூத்துக்குடி பிரத்தியங்கிரா பீடத்தில் ஆஞ்சநேய ஜெயந்தி மற்றும் பிரத்தியங்கிராதேவி மகா அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது!!
அடுத்த
தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் விருப்பமனு தாக்கல்!!
இதையும் படிக்கலாம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026