தூத்துக்குடி பிரத்தியங்கிரா பீடத்தில் மார்கழி 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை (19.12.2025) அன்று ஆஞ்சநேய ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் சாக்தஸ்ரீ சற்குரு ஶ்ரீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றன.

காலை 8.00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு புனித அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து மதியம் 1.00 மணிக்கு பிரத்தியங்கிராதேவிக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டு, அதனுடன் மகா அன்னதானமும் நடைபெற்றது.

இந்த ஆன்மிக நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் தேவியின் தரிசனம் செய்து அருள்பெற்றனர். நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தி மற்றும் ஆன்மிக உணர்வுகளுடன் சிறப்பாக நிறைவேற்றப்பட்டன.