தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கூட்டுடன்காடு ஊராட்சி கீழ் கூட்டுடன்காடு கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அவர்கள் பங்கேற்று நிழற்குடையை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைகோர்ட் ராஜா, உதவி பொறியாளர் ரவி, ஒன்றிய துணை செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி வெயிராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மங்கனி, மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் பொன்னரசு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சண்முகநாராயணன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் வசந்த், கிளை செயலாளர் கல்லாத்தான் திருசேராந்தையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நிழற்குடையின் பயன்பாட்டை பாராட்டினர்.