தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியில் இன்று பெருமளவில் புதியவர்கள் இணைந்தனர். திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செய்திங்கநல்லூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்து தாமரைக் கொடியை ஏந்தினர்.

இந்நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் முன்னிலையில், பட்டியல் அணி மாவட்டத் தலைவர் வி. பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த இணைப்பு நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ் ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவர் நவமணிகண்டன், திருச்செந்தூர் மண்டல தலைவர் செல்வகுமார், மேற்கு மண்டல தலைவர் லிங்கசெல்வம், மேற்கு மண்டல பிரபாரி இசக்கிமுத்து, தொழில் பிரிவு மாவட்ட தலைவர் சங்கர், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சின்னத்தம்பி பாண்டியன், உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் சண்முகா ஆனந்த், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மருத்துவ அணி பிரிவு மாவட்ட தலைவர் பாலாஜி, சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் மகேஸ்வரன், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் கலைச்செல்வன், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் சண்முகா ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு தாமரைக் கொடியை ஏந்தி வரவேற்றனர்.

புதியோர் இணைந்ததனால் திருவைகுண்டம் தொகுதியில் பாஜகவின் வலுசேர்க்கை மேலும் பலப்படுத்தப்பட்டதாக கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.