தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கே.சி.காலனி பகுதியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு, பணியின் தரநிலை, வேகம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில் ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், தொமுச மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் கந்தசாமி உள்ளிட்டோர் இணைந்து பணிகளை பார்வையிட்டனர்.

புதிய சாலை பணிகள் முடிவடைந்தவுடன், கே.சி.காலனி பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறி, போக்குவரத்து வசதி சிறப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.