தூத்துக்குடி செல்சினி காலணி 3வது தெரு பகுதியில் மனிதம் ஒன்றே அறக்கட்டளை சார்பில் சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாம் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, பிவெல் மருத்துவமனை, மற்றும் நெல்லை கேன்சர் கேர் மருத்துவமனை ஆகியவற்றின் இணைப்பில், செல்சினி காலனி ட்விங்கிள் மெட்ரிக் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
அறக்கட்டளை நிறுவனர் பிரபாகர் தலைமையில், வள்ளியம்மாள், சரவணசெல்வி, சக்திகணேஷ், பிரவின் உள்ளிட்டோர் இணைந்து முகாமை சிறப்பாக ஒருங்கிணைத்தனர். முகாமில் மாநகர திமுக சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன்சிங், பேராசிரியர் சுயம்புலிங்கம், மற்றும் சிவபிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ சேவையை பாராட்டினர். முகாமில் கண் பரிசோதனை, இரத்த அழுத்தம், சக்கரை நோய், புற்றுநோய் ஆகிய பரிசோதனைகள் இலவசமாக நடத்தப்பட்டன. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மனிதநேயத்தை மையமாகக் கொண்டு சமூக நலத்திற்காக செயல்படும் மனிதம் ஒன்றே அறக்கட்டளை மேற்கொண்ட இந்த முயற்சி, உள்ளூர் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தூத்துக்குடி
மனிதநேயத்தின் முகமாக — செல்சினி காலணியில் இலவச மருத்துவ முகாம்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி சந்திப்புகள் பளபளக்கும் புதிய ஒளியில் — நகரின் அழகை கூட்டும் உயர் மின் விளக்கு கோபுரங்கள்!!
அடுத்த
தூத்துக்குடி கே.சி.காலனியில் புதிய பேவர் பிளாக் சாலை – வளர்ச்சி பணிகள் வேகமாக!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026