ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தின் கொல்லங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.47.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு கூடுதல் வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் சலீஸ், உதவி தலைமை ஆசிரியர் ஷீலா, வட்டார வளர்ச்சி அலுவலர் சசிக்குமார், பொதுப்பணித்துறை பொறியாளர் அரவிந்த், ஒன்றிய பொறியாளர் செந்தில்குமார், ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணியன், ஒப்பந்தக்காரர் கருப்பசாமி, கிளைக்கழக செயலாளர்கள் குமார், பாலமுருகன், நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேபோல், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் புதியம்புத்தூரில் உள்ள சி.பா. ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அருண் – புவனேஸ்வரி திருமண விழாவிலும், தூத்துக்குடி அபிராமி மஹாலில் நடைபெற்ற வழக்கறிஞர் நயினார் இல்ல திருமண விழாவிலும் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் கல்வி, சமூக மற்றும் பொதுநல துறைகளில் தொடர்ந்து செயற்படும் சண்முகையாவின் பணி, பொதுமக்களிடையே பாராட்டுக்குரியதாக உள்ளது.