ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தின் கொல்லங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.47.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு கூடுதல் வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் சலீஸ், உதவி தலைமை ஆசிரியர் ஷீலா, வட்டார வளர்ச்சி அலுவலர் சசிக்குமார், பொதுப்பணித்துறை பொறியாளர் அரவிந்த், ஒன்றிய பொறியாளர் செந்தில்குமார், ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணியன், ஒப்பந்தக்காரர் கருப்பசாமி, கிளைக்கழக செயலாளர்கள் குமார், பாலமுருகன், நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் புதியம்புத்தூரில் உள்ள சி.பா. ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அருண் – புவனேஸ்வரி திருமண விழாவிலும், தூத்துக்குடி அபிராமி மஹாலில் நடைபெற்ற வழக்கறிஞர் நயினார் இல்ல திருமண விழாவிலும் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் கல்வி, சமூக மற்றும் பொதுநல துறைகளில் தொடர்ந்து செயற்படும் சண்முகையாவின் பணி, பொதுமக்களிடையே பாராட்டுக்குரியதாக உள்ளது.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரத்தில் கல்வி வளர்ச்சிக்கு புதிய ஒளி – நபார்டு நிதியில் இரண்டு புதிய வகுப்பறைகள் திறப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பட்டினமருதூரில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் பெண் தெய்வம் மற்றும் பாண்டிய சின்னமுடைய இளைப்பு உபகரணம் — தொல்லியல் வட்டாரத்தில் அதிர்ச்சி தரும் புதிய கண்டுபிடிப்பு!!
அடுத்த
முத்தம்மாள் காலனியில் வடிகால், சாலை பணிகள் தொடங்கவுள்ளன – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வை!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026