தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரதான சந்திப்புகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உயர்மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, குரூஸ் பர்ணாந்து சிலை அருகிலுள்ள முக்கிய சந்திப்பில் உயர்மின் விளக்கு அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவுற்றன. இதையடுத்து மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று புதிய உயர்மின் விளக்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் மற்றும் மண்டல தலைவர் தொ. நிர்மல்ராஜ், இளைஞரணி எம்ல்டன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.