தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள டி.சவேரியார்புரம் புனித சேவியஸ் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தாளாளர் குழந்தை ராஜன் தலைமை தாங்கி முன்னிலை வகிக்க, தலைமை ஆசிரியர் மாரி செல்வராணி வரவேற்புரை நிகழ்த்தினார்.

பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் லயன்ஸ் கிளப் தலைவருமான காசி விஸ்வநாதன் வழங்கினார். மேலும் ஆரோவாட்டர் பில்டர் வகைக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவியும் வழங்கினார்.

விழாவில் பேசிய அவர், “கல்வி என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் உயர்த்தும் முதலாவது அடித்தளம். நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றி, பெற்றோர் மற்றும் ஆசிரியர் சொல்வவற்றை மதித்து நடந்து முன்னேற வேண்டும்” என்று மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், மாநகர திமுக சுற்றுச்சூழல் அணி துணைத் தலைவர் நைஸ் பரமசிவம், லயன்ஸ் கிளப் செயலாளர் டேவிட், துணைத் தலைவர் ஜான் கென்னடி ராஜன், பொருளாளர் விக்னேஷ் ஜெயபால், இயக்குநர் விமல்ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள் என பலரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.