தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கங்கா பரமேஸ்வரி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில், ரோட்டரி கிளப் ஆப் தூத்துக்குடியின் சார்பாக பொதுமக்கள் பாதுகாப்பு முன்முயற்சி திட்டத்தின் கீழ் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கேமராக்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேயர் ஜெகன் பெரியசாமி அர்ப்பணித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, ரோட்டரி சங்கத்தின் தலைவர் பின்டோ வில்லவராயர், செயலாளர் மகாலிங்கம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பூங்காக்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை நிறுவும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக மேயர் தெரிவித்தார்.