தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பால்பாண்டி நகர் பகுதியில் நடைபெற்று வரும் புதிய வடிகால் பணிகள் விரைவாகவும் முழுமையாகவும் செயல்படுத்தப்படுகின்றன. இந்த பணிகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்ய மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பணிகள் நடைபெறும் பகுதிகளில் நிலைமைகளை ஆய்வு செய்த அவர், வடிகால் அமைப்புகள் தரமாகவும் திட்டப்படி நிறைவேற்றப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில் வட்டக் கழகச் செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், தொமுச மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.