ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், சிவலூர் கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைதள நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணிகள் தொடங்கின.

இந்த பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பொதுமக்களை சந்தித்து, கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஐகோர்ட் ராஜா, வருவாய் ஆய்வாளர் ரேணுகா, கருங்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ் காந்தி, மாவட்ட பிரதிநிதி மாரிச்செல்வம், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பேச்சிமுத்து, இளைஞரணி முருகேசன், கிளை பிரதிநிதி குமார், கிளை அவைத்தலைவர் மாரிச்செல்வன், கழக நிர்வாகிகள் KTC ராஜா, ஆண்டி, வெள்ளசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.