தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் அதிவேக இணைய வசதி, கணினி மற்றும் தேவையான மின்னணு உபகரணங்கள் இல்லாத நிலையிலும், வரும் 1ஆம் தேதி முதல் இ-பைலிங் நடைமுறையை கட்டாயப்படுத்தும் முயற்சியை கடுமையாக எதிர்த்து, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றப் பணிகளை முழுமையாக புறக்கணித்தனர்.
நாகர்கோவில் நீதிமன்றம் முன்பு, நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் தலைமையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இ-பைலிங் நடைமுறைப்படுத்த தேவையான அடிப்படைத் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத நிலையில் இதனை கட்டாயப்படுத்துவது நடைமுறைக்கு புறம்பானது, வழக்குரிமை பாதிக்கப்படக்கூடியது என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இன்றைய போராட்டத்தால் நாகர்கோவில் நீதிமன்றங்களின் வழக்குப் பணிகள் முழுமையாக முடங்கியிருந்தன. போராட்டம் குறித்து வழக்கறிஞர்கள் தொடர்ந்து கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடி
இ-பைலிங் கட்டாயத்திற்கு எதிர்ப்பு – நாகர்கோவில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம்; நீதிமன்றப் பணிகள் முடக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பு செய்த நிறுவனத் தலைவர் சகிலன்!!
அடுத்த
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ தொடக்கி வைத்த திசையன்விளை–இராமேஸ்வரம் புதிய அரசு பேருந்து சேவை!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026