விளாத்திகுளம் வட்டத்தில் திசையன்விளை–இராமேஸ்வரம் நோக்கி புதிய அரசு பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டது. பெரியசாமிபுரம், பச்சையாபுரம், குஞ்செயபுரம் வழியாக இயக்கப்படும் இப்புதிய வழித்தடம் பொதுமக்களின் நீண்டநாள் தேவையை பூர்த்தி செய்வதாக உள்ளது. புதிய பேருந்தை G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்வில் தூத்துக்குடி மண்டல பொது மேலாளர் ராமகிருஷ்ணன், துணை மேலாளர் (கிழக்கு) சண்முகம், விளாத்திகுளம் பனிமனை மேலாளர் A.M. சாமி, ஒன்றிய செயலாளர்கள் சின்னமாரிமுத்து, இம்மானுவேல், மாவட்ட நிர்வாகிகள் பால்பாண்டி, பெப்பின்காகு, எப்ரோமீனாமேரி, ஒன்றிய நிர்வாகிகள் ராஜபாக்கியம், பாண்டியன், ஆரோக்கியராஜ், தர்மநேசசெல்வின், முனியசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

கிளை செயலாளர்கள் நல்லமுத்து, தனசேகரன், டிஜிட்டல் ஏஜென்ட்கள் மஹிபால், சபரிமுத்து, தொமுச கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் இணைந்து நிகழ்வை சிறப்பித்தனர்.