இளம் தலைமுறைக்கு திமுகவின் கொள்கைகள், சாதனைகள், வரலாற்றை எளிமையாக எடுத்துரைக்கும் நோக்கில் திமுக இளைஞரணி சார்பில் முரசொலி நாளிதழில் வெளியிடப்பட்டு வரும் “முரசொலி பாசறை” பக்கம், தனது 1,000வது இதழை எட்டியுள்ளது.

இந்த சிறப்புமிக்க இதழின் பிரதியை திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், “முரசொலி பாசறை”யின் தொடர்ச்சியான பங்களிப்பை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வக்கீல் ஜோயல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, இதழின் வரலாற்றுச் சிறப்பை நினைவுகூர்ந்தனர்.

முரசொலி பாசறை, திமுகவின் சிந்தனைகள் மற்றும் மக்கள் நலப் பணிகளை இளம் தலைமுறைக்கு எளிய வடிவில் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது.