தூத்துக்குடி நகரில் காந்தியடிகளின் 157-ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு சார்பில், வ.உ.சி சாலை கிழக்கு மண்டலத்தில் (பழைய மாநகராட்சி அலுவலக வளாகம்) அமைந்துள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ. ஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டு காந்தியடிகளின் நினைவுக்கு மரியாதை செலுத்தினர்.
காந்தியடிகளின் உண்மைப் பாதை, அஹிம்சை மற்றும் சமூக நீதி குறித்த பாடங்கள் மக்கள் மனதில் என்றும் நிலைக்க வேண்டும் என நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் காந்தியடிகளின் 157-ஆம் ஆண்டு பிறந்த தினத்தில் அமைச்சர்கள், ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ, மேயர் மரியாதை !!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கல்வியால் சமூக மாற்றம் உருவாக்கிய காமராஜருக்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் நினைவு அஞ்சலி!!
அடுத்த
போதை ஒழிப்பு உறுதி மொழி பேரணி – தூத்துக்குடியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026