பத்திரிக்கை உலகின் முடிசூடா மன்னர் கொடை வள்ளல் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளீதரன் தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் செந்தூர பாண்டி, ராஜன், சேகர், ஐசன், சில்வா, மாவட்ட ஊடக பிரிவு தலைவர் ஜான் சாமுவேல், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மாவட்டத் துணைத் தலைவர் பிரபாகரன், மாவட்டச் செயலாளர் கோபால், முன்னாள் மகிலா காங்கிரஸ் மாவட்ட தலைவி முத்துவிஜயா, மற்றும் தனுஷ் ரத்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.