தூத்துக்குடி முத்தையாபுரத்தில் தேமுதிக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா உத்தரவுப்படி தூத்துக்குடி, முத்தையாபுரத்தில் தேமுதிக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமினை மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். இதில், முத்தையாபுரம் பகுதி செயலாளர் ஸ்மார்ட் சுரேஷ் முன்னிலை வகித்தார். பின்னர் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் வழங்கினார்.

நிகழ்ச்சியில், வட்டச் செயலாளர் கிருஷ்ணசாமி, மாவட்ட துணை செயலாளர் மாலதி, பகுதி செயலாளர் நாராயணமூர்த்தி, பொருளாளர் சக்திவேல், கருங்குளம் ஒன்றிய பொருளாளர் மணிகண்டன், தொமுச துணைத்தலைவர் சேக்காசின், துணைச் செயலாளர் அக்பர், தகவல்தொழில்நுட்ப அணி பிரம்மநாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.