தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது ஆணைப்படியும்,
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோரது ஆலோசனையின் பேரிலும், ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா நேரில் சென்று பார்வையிட்டார்.

ஒட்டப்பிடாரம் தொகுதிக்குள்பட்ட —

1. ஒட்டநத்தம் பாகம் எண் 23 மற்றும் 24 வாக்காளர்களுக்கு ராமானுஜம் இந்து தொடக்கப்பள்ளியில்,

2. மணியாச்சி பாகம் எண் 25 வாக்காளர்களுக்கு ஆர்.சி. தொடக்கப்பள்ளியில்,

3. ஒட்டப்பிடாரம் பாகம் எண் 38, 39, 40 வாக்காளர்களுக்கு TMB மெக்கவாய் மேல்நிலைப்பள்ளியில்,

4. புதியம்புத்தூர் பாகம் எண் 50, 52, 53 வாக்காளர்களுக்கு ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

ஒவ்வொரு மையத்திலும் கணக்கீட்டு படிவங்கள் சரியான முறையில் நிரப்பப்படுகிறதா என்பதை எம்.சி. சண்முகையா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து தேவையான வழிமுறைகளை வழங்கினார்.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு பணிகளை ஒருங்கிணைத்தனர்.