கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செக்காரக்குடி ஊராட்சியின் நடுசெக்காரக்குடி கிராமத்தில், தமிழ்நாடு அரசின் அரசியல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார நிலையம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சிராணி, உதவி பொறியாளர் தளவாய், மருத்துவ அலுவலர் முகமது ஹாசிம், வருவாய் ஆய்வாளர் கவிதா, ஊராட்சி செயலாளர் ஆதிமூல பெருமாள், கருங்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ்காந்தி, கிளைக் கழகச் செயலாளர்கள் மாயாண்டி, ஐஸ் மாரியப்பன், சேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர்.