தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி–காலபைரவர் சித்தர் பீடத்தில், தென்தமிழகத்தில் தனித்துவமாக எழுந்தருளியுள்ள ஸ்ரீ குருமகாலிங்கேஸ்வரருக்கு ஜப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

காலை வேளையில் குருமகாலிங்கேஸ்வரரும் நந்தியும் பால், தயிர், பன்னீர், இளநீர், புஷ்பம் மற்றும் அன்னத்தால் அபிஷேகம்செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் மஹா தீபாராதனை, யாகம், மஞ்சள், சந்தனம், பால் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக வழிபாடுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழிக்கவும், பக்தர்கள் வாழ்வில் செல்வம் மற்றும் வளம் பெருகிடவும் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.

விழா நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வழிபாடுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.