தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வசவப்பபுரம் கிராமம் பசும்பொன் நகரில், மக்கள் நீண்ட நாளாகக் கோரிக்கை வைத்திருந்த வாய்க்காலில் குளிப்பதற்கான புதிய படித்துறை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு (20.07.2024) அன்று முறப்பநாடு தர்ம தேவதை கலையரங்கில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் இதற்கான மனு வழங்கப்பட்டது. தொடர்ந்து, (17.02.2025) அன்று ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா பசும்பொன் நகர் வாய்க்கால் பாலம் அருகே புதிய படித்துறை அமைக்க வேண்டி மனு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, எம்.சி. சண்முகையா MLA நிதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய படித்துறை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது என்பதை வசவப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த மு. கணேசன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும், வசவப்பபுரம் கிராமம் அம்பேத்கர் நகர் பகுதியில் வரதராஜ பெருமாள் கோவில் அருகிலும், அனவரதநல்லூர் கிராமம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவில் பிள்ளையார் கோவில் அருகிலும், தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய படித்துறை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.