தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம் சந்தை ரோடு பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், வட்ட கழக செயலாளர் பொன்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் பேபி ஏஞ்சலின், ரெக்ஸ்லின் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.