தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களை மண்டல வாரியாக நடத்தும் திட்டத்தின் தொடக்கமாக தெற்கு மண்டல அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர் பாலகுருசாமி, மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், சரவணகுமார், பச்சிராஜன், முத்துவேல், ராஜதுரை, வைதேகி ஆகியோர் கலந்து கொண்டனர்.