தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கான கடன் மற்றும் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்றைய முகாமினை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு வியாபாரிகளுடன் உரையாடி, அவர்களுக்கு வழங்கப்படும் அரசு நலத் திட்டங்களின் பயன்களை விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.