தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக மருத்துவமனை (ESI) சார்பாக தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து, பயனாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, துணை மேயர் ஜெனிட்டா, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.