ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தின் குலசேகரநல்லூர், ஆரைக்குளம், எஸ்.கைலாசபுரம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாம் குலசேகரநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

இந்த முகாமில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு, மக்களின் கோரிக்கைகள் மற்றும் வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், முகாமில் மனு அளித்த பொதுமக்களுக்கு பட்டா மாறுதல், மின்சார வாரியம், பொதுவிநியோக திட்ட பெயர் திருத்தம் உள்ளிட்ட ஆணைகளை நேரடியாக வழங்கினார்.

அத்துடன், வேளாண்மைத் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் இடுபொருட்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர்கள் அறிவழகன், சுசீலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், ஜவஹர் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று முகாமின் பயனை பெற்றனர்.