தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம் வீரமணி நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வரும் புதிய சாலை மற்றும் வடிகால் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அப்பகுதி பொதுமக்கள் சாலையை உயர்த்தி அமைக்கவும், வடிகாலை நீட்டித்து அமைக்கவும் கோரிக்கை விடுத்தனர். அதனை கவனமாக கேட்ட மேயர், “இக்கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்” என்று உறுதியளித்தார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, துணை மேயர் ஜெனிட்டா, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மண்டல தலைவர் பாலகுருசாமி, பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் விஜயகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.